பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு பயிற்சி கொடுக்க பெரம்பலூரில் முகாம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை தெற்கு எம்எல்ஏ
சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் இவ்வாறு கூறினார்…
இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுவதை
தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவார்கள் மீது புகார் கொடுத்தாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை…. குறிப்பாக
தொடர்ச்சியாக இந்து மத நம்பிக்கைகளையும், இந்து கோயில்களையும் டார்கெட் செய்து பேசி வருகிறார்.
ஆனால், மற்ற மத செயல்பாடுகளை அவர் கண்டுகொள்ள மாட்டார். அவர் யாரை திருப்தி படுத்த இப்படி செய்கிறார் என்பதை அவர் விளக்க வேண்டும். சமூகத்தில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.
பாஜகவும், ஆர்எஸ்எஸும் தீண்டாமையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆகையால், திருமாவளவன் ஆர்எஸ்எஸ்க்கும், பாஜகவுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். போதை பொருள் ஒழிப்பதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது ஆனால் மறுபக்கம் டாஸ்மாக்கை நடத்தி வருகிறது. இதுதான் திமுகவின் இரட்டை வேடம்” என இவ்வாறு அவர் கூறினார்.