கொச்சியில் ரூ.60 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்| Dinamalar

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் ரூ.60 கோடி மதிப்புள்ள 30 கிலோ மித்தேன் கியுனால் போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொச்சி விமான நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, கேரளா மாநிலம் பாலக்காடுவை சேர்ந்த முரளிதரன் என்பவரிடமிருந்து ரூ.60 கோடி மதிப்புள்ள 30 கிலோ மித்தேன் கியுனால் போதைப் பொருட்கள் சிக்கின. இந்த போதைப் பொருட்கள் ஜிம்பாவே நாட்டிலிருந்து தோஹா வழியாக கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. முரளிதரனை போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்த அதிகாரிகள் போதைப் பொருட்களை அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.