பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து; பாஜக மண்டல தலைவர் நீக்கம்.! சொந்த கட்சியினர் கொடுத்த புகாரில் வழக்கு

போபால்: பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவரது சொந்த கட்சியினர் கொடுத்த புகாரின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பாஜக மண்டல தலைவர் பிரீதம் சிங் லோதி என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ‘பிராமணர்கள் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கின்றனர். அவர்கள் மக்களை முட்டாள் ஆக்குகின்றனர். மக்களின் பணத்தில் சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர்’ என்று பேசினார். இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பிராமணர்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தாக கூறி, பாஜக இளைஞரணி தலைவர் பிரவீன் மிஸ்ரா என்பவர், பிரிதம் சிங் லோதி மீது போலீசில் புகார் அளித்தார்.

இவ்விவகாரம் குறித்து பிரீதம் சிங் லோதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, அவரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பிராமணர்கள் குறித்து பேசிய பிரீதம் சிங் லோதி மீது இரண்டு கொலை வழக்குகள் உட்பட 37 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவின் முன்னாள் முதல்வர் உமாபாரதியின் நெருங்கிய உதவியாளராக இருக்கும் பிரீதம் சிங் லோதி, கடந்த 2013 மற்றும் 2018 சட்டமன்றத் தேர்தல்களில் பிச்சோர் தொகுதியில் தோல்வியடைந்தார். அதன்பின் 2018ல் நடந்த தேர்தலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ கேபி சிங்கிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.