மொட்டையடித்து சாக்கடையை சுத்தப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்ட இளைஞர் – வீடியோ வைத்து வழக்கு பதிவு

வடக்கு டெல்லியின் வஜிராபாத் பகுதியில் தண்ணீர் மோட்டார் திருடியதாக 25 வயது இளைஞரை சந்தேகத்தின் பேரில் ஒரு குழு பிடித்திருக்கின்றனர். மேலும், அவரை கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, அவரின் தலையை மொட்டையடித்து, அருகிலிருந்த சாக்கடையைச் சுத்தப்படுத்தக் கூறியிருக்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, துணை காவல்துறை ஆணையர் (வடக்கு) சாகர் சிங் கல்சி, “வெள்ளிக்கிழமை முதல், சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது, அதில் சிலர் சகில் என அடையாளம் காணப்பட்ட ஒருவரை அடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தாக்கப்படும் இளைஞர்

இந்த சம்பவம் பிற்பகல் 2 மணியளவில் நடந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணையின் போது, ​​ வசிராபாத்தில் வசிக்கும் பைசான் என்பவரின் வீட்டில் தண்ணீர் மோட்டாரைத் திருட முயன்ற திருடன் ஒருவரைப் பிடித்ததாகக் கூறியிருக்கின்றனர். அது தொடர்பாக விசாரித்து வருகிறோம். அந்த இளைஞரைத் தாக்கியவர்கள் மீது, பிரிவு 323, 341,355, 504 உள்ளிட்ட, பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.