`இந்த நாளை மறக்கவே முடியாது!' – ஊட்டி ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை பூமிகா

’ரோஜா கூட்டம்’, ’ஜில்லுனு ஒரு காதல்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகை பூமிகா. தமிழ் மட்டுமல்லாது மற்ற இந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கியிருக்கும் பூமிகா, திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது பிறந்தநாளை ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார்.

நடிகை பூமிகா

அந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆதரவற்றோருக்கு உணவு ஏற்பாடு செய்ததுடன் அவரே உணவையும் பரிமாறியிருக்கிறார். மேலும், அவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்து அவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இது குறித்து நடிகை பூமிகா, “இந்த எளிய மக்களுடன் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாளாக இருந்தது. எளிய மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்வேன்” என மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சமூக அக்கறையுடன் தனது பிறந்தநாளை ஆதரவற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்த நடிகை பூமிகாவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.