சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது என டாஸ்மாக் தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏழு, எட்டு கடைகள் மட்டுமே இருப்பதால் திட்டத்தை அமல்படுத்துவது எளிது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் விளக்கம் அளித்த நிலையில் விசாரணையை சென்னை ஐகோர்ட் செப்.16-க்கு ஒத்திவைத்துள்ளது.