தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவை தொட்டுள்ளது நெல் உற்பத்தி – தமிழக அரசு

தமிழகத்தில் நெல் உற்பத்தி முன் எப்போதும் இல்லாத அளவை தொட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுமார் 1.22 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 1.20 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவும் 22 லட்சம் ஹெக்டேரை தாண்டியுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டில் நெல் சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.