"பள்ளி நேரத்தில் பஸ் இல்லை": ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்

திருக்கோயிலூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்திலிருந்து திருக்கோயிலூர் நகர பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த அரசுப் பேருந்தில் கூவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தினமும் திருக்கோயிலூர் பகுதியில் உள்ள அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
image
இந்த நிலையில் பள்ளி நேரத்தில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் பள்ளி மாணவ – மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடியும் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போக்குவரத்துத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவும் இப்பகுதியில் கூடுதலாக அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.