மத்தியதரை கடலில் மூழ்கிய 130 அடி நீள சொகுசு படகு… பரபரப்பு காட்சி

இத்தாலி அருகே மத்தியதரை கடலில் மூழ்கத் தொடங்கிய சொகுசு படகில் சிக்கிக்கொண்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த அந்த 130 அடி நீள சொகுசு படகு மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கத்தொடங்கியது.

அந்த படகில் இருந்து அனுப்பப்பட்ட அபாய சிக்னலை கவனித்து அங்கு விரைந்த கடலோர காவல் படையினர், படகில் இருந்த 4 பயணிகள் மற்றும் 5 மாலுமிகளை மீட்டனர். சொகுசு படகு வேகமாக மூழ்கியதால் அதனை இழுவை படகு மூலம் கரைக்கு இழுத்துவரும் முயற்சி தோல்வியடைந்தது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.