இந்தியாவில் கொரோனா பாதிப்பு..! – தொற்று நிலவரம் முழு விபரம்..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முந்தைய தினத்தை விட சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,383 பேருக்கு கொரோனா
தொற்று
உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளி ஆகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று உலக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இன்னும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஒழிந்து விடாத நிலையில் மக்கள் இன்னும் அச்ச உணர்விலேயே இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 4,510 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று 5,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 5,383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 58 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 20 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,449 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6424 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 84 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் தற்போது வரை 45,281 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் நேற்று ஒரே நாளில் 14.91 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 217 கோடியாக அதிகரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.