இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அபிவிருத்தி செயற்றிட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேக்கும் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே கோபால் பாக்லே இந்த விடயத்தை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் நட்புறவினை கட்டியெழுப்புவது சம்பந்தமாகவும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன இதன்போது நன்றி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.