நூலகத்திற்கு சாலை வசதி செய்து தர கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்திற்கு ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முதியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வந்து புத்தகம் மற்றும் நாளிதழ்கள் படித்து செல்கின்றனர். பெரும்பாலும் அரசு வேலைக்கு செல்லக்கூடிய இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

இந்த நூலகம் கடந்த 2003ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டது.  ஆனால் இதுவரை பராமரிப்பு செய்யாததால் கட்டிடத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தும், பழுதடைந்தும் கிடக்கிறது. நூலகத்தை சுற்றி முட்புதர்கள் சூழ்ந்து கிடப்பதால் விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இந்த நூலகத்திற்கு படிக்க வரும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ரோடு வசதி மற்றும் கட்டிடம் பராமரிப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.