முன்விரோதம் காரணமாக இந்து இளைஞர் முன்னணி அமைப்பின் நகரத்தலைவர் காரை சேதப்படுத்திய 2 பேர் கைது..!

விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட  முன்விரோதம் காரணமாக இந்து இளைஞர் முன்னணி அமைப்பின்  நகரத்தலைவர் காரை சேதப்படுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்  இந்து இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த ஹரிஷ் என்பவரின் கார் மர்ம நபர்களால் நேற்று உடைக்கப்பட்டது.

இது குறித்த புகார் பேரில் சிசிடிவி  காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் தன்னுடைய நண்பர் ஹரிஹரனுடன் இணைந்து காரை சேதப்படுத்தியது தெரியவந்துள்ளதாக எஸ்பி பத்ரி நாராயணன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.