நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய 'ஏ' அணி அபார வெற்றி

சென்னை,

இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய ‘ஏ’ அணி 49.3 ஓவர்களில் 284 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்னும், ஷர்துல் தாக்குர் 51 ரன்னும் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 38.3 ஓவர்களில் 178 ரன்னில் அடங்கியது. இதனால் இந்திய ‘ஏ’ அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக டேன் கிளெவர் 83 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ராஜ் பாவா 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய ‘ஏ’ அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.