பயங்கரவாதி சுட்டுக் கொலை| Dinamalar

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகம்மது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்பு படையினரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அவாத்தூ பகுதியில், ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.இதில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தொடர்கிறது. ‘கொல்லப்பட்டவர் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் – இ – முகம்மது அமைப்பைச் சேர்ந்தவர்’ என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.