21-வது நாளாக ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார் ராகுல் காந்தி

பாண்டிக்காட்:
ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாண்டிக்காட்டில் இருந்து 21-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார்.

ராகுல் மேற்கொண்டு வரும், காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. ராகுலுடன் சேர்ந்த 118 பேர் தொடர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, அவர் நடைபயணம் மேற்கொள்ளும் பகுதிகளில் அந்த பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் மற்றும் இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் ராகுலுடன் இணைந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 7ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 நாட்கள் 54 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் கடந்த 11ந்தேதி முதல் கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 18 நாட்கள் கேரளாவில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, இன்று கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பாண்டிக்காட்டில் இருந்து 21-ஆம் நாள் ‘பாரத் ஜோடோ யாத்திரை’-யை தொடங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.