நானே வருவேன்: ஆடல் பாடலுடன் கோவை தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம்

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் நானே வருவேன். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. அனைத்து இடங்களிலும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், திரையரங்கு முன்பு ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோல் கோவையிலும் தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியது. கோவையில் படம் வெளியான அனைத்து திரையரங்குகள் முன்பும் திரண்ட ரசிகர்கள் அதிகாலை முதலே ஆட்டம் போடத் தொடங்கினர். குறிப்பாக 100 அடி சாலையில் அமைந்திருக்கும் கங்கா திரையரங்கம் முன்பு ஏராளமான தனுஷ் ரசிகர்கள் திரண்டனர். கோவை மாவட்ட தனுஷ் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. 

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் எனக் கூறிய ரசிகர்கள், அந்தவரிசையில் நானே வருவேன் திரைப்படமும் இடம்பிடிக்கும் என தெரிவித்தனர். மற்ற படங்களில் 100 விழுக்காடு நடிப்பை கொடுக்கும் தனுஷ், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு அதற்கும் மேலான உழைப்பை கொடுத்திருப்பார் எனவும் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.