ஆம்புலன்சில் பிடிபட்ட ரூ.25 கோடி கள்ள நோட்டு… கடைசியில்தான் ட்விஸ்ட்!!

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், சூரத்தில் உள்ள காம்ரஜ் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் பணம் கடத்தப்படுவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை மறித்து சோதனை செய்தபோது அதில் 6 அட்டைப் பெட்டிகளில் 25 கோடியே 80 லட்சம் பணம் இருந்துள்ளது.

பின்னர் அந்த நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நோட்டுகளில் ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா என்பதற்கு பதில், ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா என அச்சிடப்பட்டிருந்தது.

கள்ள நோட்டுகள் என்று நினைத்த போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அது சினிமா ஷூட்டிங்காக அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.