பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கு: நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட இம்ரான் கான்

பெண் நீதிபதியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான், பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதை அடுத்து, பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது அரசு கவிழ்ப்பில், வெளி நாடுகளின் சதித்திட்டம் இருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், காவல் துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

யப்பா மணிக்கு 240 கி.மீ. வேகம்… கியூபா, புளோரிடாவை புரட்டிப் போட்ட இவான் புயல்!

மேலும், காவல் துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான் கான் தமது பேச்சின் போது குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று, இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி தனது பேச்சுக்கு இம்ரான் கான் மன்னிப்பு கேட்டார். இதை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இம்ரான் கான் வருகையால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.