பொறியியல் கல்லூரிகளுக்கு 5நாள் விடுமுறை! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை (1ந்தேதி) முதல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சொந்த ஊருக்கு சென்று விழாவினை சிறப்பிப்பது வழக்கம். அதையொட்டி,  தமிழகஅரசும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இநத் நிலையில்,  சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.