மொபைல் போன் பறிக்க முயன்று ரயில் ஜன்னலில் தொங்கிய திருடன்

பாட்னா : பீஹாரில், ரயிலில் பயணியின் மொபைல் போனை பறிக்க முயன்று, ஜன்னலில் தொங்கியபடியே வந்த திருடன் குறித்த ‘வீடியோ’ வேகமாக பரவி வருகிறது.

பீஹாரில், பாஹல்பூர் மாவட்டத்தில், லைலாக் மற்றும் கோகாவுக்கு இடைப்பட்ட ரயில் நிலையத்தில், ஜமால்பூர் சாஹிப்கஞ்ச் பயணியர் ரயில் நின்று கொண்டிருந்தது. ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தன் மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, நடைமேடையில் இருந்து திருடன், அப்பயணியின் மொபைல் போனை பறிக்க முயன்றார்.
ஆனால், பயணி திருடனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதற்கிடையே, ரயில் புறப்பட்டு வேகமெடுத்தது. இருப்பினும், பயணி திருடனை விடாமல் பிடிக்கவே, ரயிலுக்கு வெளியே ஜன்னலில் திருடன் தொங்கியபடி வந்தார். ‘பயத்தில் தன்னை கீழே விட்டு விடவேண்டாம்’ என பயணியிடம் கெஞ்சினார்.பின், பயணியர் சிலர் சேர்ந்து திருடனை ரயிலுக்குள் இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.
இச்சம்பவத்தை, பயணி ஒருவர் தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது தற்போது வேகமாகப் பரவி வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.