7 படகுகள், 10 குதிரைகள், சொந்தமாகத் தீவு வாங்கிய இந்தியப் பாடகர்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

1977-ம் ஆண்டு பிறந்த பிரபல பஞ்சாபி பாடகர் மிகா சிங் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர். இவர் பாடிய ஏராளமான திரைப்படப் பாடல்கள் ரசிகர்களுக்கிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவர் ஒரு பாப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகா சிங் ‘Swayamvar-Mika Di Vohti’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரபல பாடகராக இருக்கும் மிகா சிங் சொந்தமாக ஒரு தீவை விலைக்கு வாங்கியுள்ளார். அந்த தீவில் ஒரு ஏரியும் 7 படகுகளும் 10 குதிரைகளும் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாகப் பாடகர் மிகா சிங் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து சொந்தமாக ஒரு தீவை வைத்திருக்கும் முதல் இந்தியப் பாடகர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. இருப்பினும் மிகா சிங் வாங்கிய தீவு எங்கு உள்ளது மற்றும் அதன் மதிப்பு குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பாடகர் மிகா சிங் சொர்க்கத்தில் தனது நேரத்தைச் செலவு செய்கிறார் என்றும் அவர்தான் உண்மையான ராஜா என்றும் சிலர் கமெண்ட் செய்து வரும் நிலையில் சிலர் அவரை நகைச்சுவையாக விமர்சித்தும் வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.