சென்னையில் 15 நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த தடை!

சென்னை: சென்னை நகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் திருமாவளவனின் எதிர் மனித சங்கிலி அறிவிப்பு போன்றவற்றால் தமிழ்நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழகஅரசு எந்தவொரு பேரணி, பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு  நவம்பர் 6ந்தேதிக்கு  அனுமதி வழங்கியது.

இந்த நிலையில்,  சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,  சென்னை மாநகரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு செப். 30-ம் தேதி (நேற்று) இரவு 11 மணிக்கு தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.