"`புஷ்பா' படம் என்னை பான் இந்தியா நடிகையாக்கியுள்ளது!" – பாலிவுட் மேடையில் ராஷ்மிகா மந்தனா

`புஷ்பா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியா முழுவதும் பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்துள்ளார். தற்போது அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக `வாரிசு’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர பாலிவுட், டோலிவுட், கோலிவுட் எனப் பல மொழிப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

புஷ்பா படம்; அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா

இந்நிலையில், தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளியாகவுள்ள ‘குட் பை’ என்னும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இப்படம் இந்த மாதம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அந்தப் படத்துக்கான புரொமோஷன் நிகழ்வு ஒன்றில், தன்னை நாடுமுழுவதும் பிரபல நடிகையாக வலம் வரவைத்த ‘புஷ்பா’ படம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

இது பற்றி பேசிய ராஷ்மிகா, “‘கீதா கோவிந்தம்’ படம் ஒரு நடிகையாக என்னைப் பலரும் திரும்பி பார்க்க வைக்கும்படி அமைந்த படம். அதன் பிறகு ‘புஷ்பா’ என்னை நாடு முழுவதும் ஒரு நடிகையாக அனைவரிடமும் கொண்டு சேர்த்தது. அது என் மீதான பார்வையையே முற்றிலுமாக மாற்றியது. ‘புஷ்பா’ படத்தைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம் என்று எங்களுக்குத் தெரியும். அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. படத்தின் கான்செப்ட் ரொம்ப நன்றகா இருந்தது. எனவே அது அனைவரிடமும் நல்ல வரவேப்பைப் பெற்றது” என்று கூறினார்.

ராஷ்மிகா மந்தனா

`புஷ்பா’ படத்தின் முதல் பாகம் (Pushpa: The Rise) நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடிப்பில் இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதிலும் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.