கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகத்தர்களின் 2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடுகளை இம் மாதம் 13ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ. மன்சுர் தெரிவிக்கையில்,
2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு செய்யப்பட்ட இடமாற்றப் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையினால் சிபாரிசு செய்யப்பட்ட இடமாற்றப் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடமாற்றம் 02.01.2021ம் திகதி முதல் நடைமுறைக்குவரும் என்பதையும், இவ்விடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், மேன்மறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் அறியத்தரப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கால தாமதமாக கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
இது தொடர்பில் விபரமடங்கிய சுற்றுநிரூபம் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.