தொடரை வெல்லப்போவது யார்? – கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

லாகூர்,

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 6 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகள் பெற்று தொடர் 3-3 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இந்நிலையில் தொடர் யாருக்கு என தீர்மானிக்கும் இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 170 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் அடித்து அசத்தியது. அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தரப்பில் பில் சால்ட் 41 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார்.

இன்று நடக்கும் 7வது டி20 போட்டியில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் லாகூரில் சந்திக்கின்றன. சொந்த மண்ணில் நடக்கும் தொடரை பாகிஸ்தான் அணி வெல்ல கடுமையாக போராடும். அதே வேளையில் இங்கிலாந்து அணியும் தொடரை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.