பெண் குழந்தைக்கு சிகரெட் சூடு ..!! கொடுமைப்படுத்தியது பெற்ற தாயும் அவரின் 2-வது கணவரும்..!!

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 7வது லேன் பகுதியில் வசித்து வருபவர் கன்னியம்மா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகள் பானுவுக்கு (28) விமல்ராஜ் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஏஞ்சல் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவரது கணவர் விமல்ராஜுகும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே பானுவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திடீரென தன் தாய் கன்னியம்மாவுக்கு போன் செய்த பானு, குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார். உடனே குழந்தையை பார்க்க கன்னியம்மா சென்றுள்ளார்.

அங்கு குழந்தையை பார்த்த போது முகத்தில் சிராய்ப்பு காயங்கள், உடலில் சூடு வைக்கப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே சென்னை எழும்பூர் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் முகத்தில் காயம், சூடு வைத்த தழும்பு இருந்ததை பார்த்து சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்த வந்த அடையாறு சாஸ்திரி நகர் போலீசார் குழந்தையின் பாட்டி கன்னியம்மா மற்றும் தாய் பானுவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உல்லாசமாக இருப்பதற்கு முதல் கணவரின் குழந்தை இடைஞ்சலாக இருந்ததாக கருதி, பானுவும் ஜெகனும் சேர்ந்து குழந்தையை அடித்தும் சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை குழந்தை குறித்து இருவருக்குமிடையே தகராறு முற்றியதில், இருவரும் சேர்ந்து குழந்தையை ஆத்திரத்தில் பலமாக அடித்ததில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் குழந்தை ஏஞ்சலின் தாய் பானு, அவரது இரண்டாவது கணவர் ஜெகன் ஆகிய இருவரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.