உ.பி., துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 5 பேர் பலி| Dinamalar

பதோகி: உத்தரபிரதேச மாநிலம் பதோகியில் துர்கா பூஜை பந்தலில் நேற்று (அக்.,2) இரவில் ஆரத்தி நடைபெற்றது. அப்போது பந்தலுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அந்த நேரத்தில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்த 55 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8, 10, 12 வயதுடைய மூன்று சிறுவர்கள், மற்றும் 45, 48 வயதுடைய இரு பெண்கள் என 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.