காபூல் குண்டுவெடிப்பில் 53 பேர் பலி… பெண்கள், குழந்தைகள் மட்டும் 46 பேர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் தங்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகள் கையாளப்படுவகாக கூறி, அதற்கு எகிராக பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் அப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி நாடு ஒருபுறம் போராட்ட களமாக இருக்க, மறுபுறம் மசூதிகள், தூதரகங்கள், பஸ் நிலையங்கள் என பொது இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்வதும் இங்கு சர்வசாதாரண நிகழ்வாகி வருகிறது.

தலைநகர் காபூலில் உள்ள பிரபல கல்வி மையத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை மொத்தம் 53 பேர் பலியாகி உள்ளதாகவும், அவர்களில் 46 பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று்ம், 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் ஆப்கனுக்கான ஐ.நா. குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்தபோது, கல்வி மையத்தின் வெளியே பெண்களும், சிறுபான்மை சமூகத்தினரும் அரசுக்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தி உள்ளனர். அப்போதுதான் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா., பொதுச் செயலாளர் வாழ்த்து!

இந்த குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் அங்கு இன்று த்ற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. காபூல் மேற்கு பகுதியில் சஹீத் மசாரி சாலைக்கு அருகே அமைந்துள்ள புல்-இ- சுக்தா பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹசாரா சிறுபான்மை மக்கள் வசிக்கும் இப்பகுதியில் நிகழ்ந்துள்ள தற்கொலைப் படை தாக்குதலில் பலியானோர், படுகாயமடைந்தோர் குறித்த தகவல்களை தலிபான் அரசு இதுவரை வெளியிடவில்லை.

காபூலில் கல்வி மையத்தில் நிகழ்ந்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.