சேலம் || ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சாமிநாயக்கன்பட்டி ஏ.ஆர். காலனி பகுதியை சேர்ந்த வேலு என்பவரது மகன் கபிசேனா(20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கபிசேனா நேற்று குளிப்பதற்காக நண்பர்களுடன் மாங்குப்பை ஏரிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது ஏரியின் நடுப்பகுதிக்கு செல்வதற்கு அனைவரும் பரிசலில் சென்றபோது கபிசேனா தண்ணீரில் குதித்துள்ளார். பின்பு வெகு நேரமாகியும் கபிசேனா வெளிய வராததால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து தண்ணீரில் மூழ்கிய கபினேசனை தேடினர். ஆனால் நேற்று இரவு வரை தேடியும் கபிநேசரின் உடல் மீட்கப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் தீயணைப்பு வீரர்கள் மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு, உடலை மீட்டனர்.

இதையடுத்து போலீசார், கபிசேனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.