பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரிப்பு| Dinamalar

புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி:

முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும், தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

யோகி ஆதித்யநாத்:

latest tamil news

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அகிலேஷிடம் பேசி, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை அழைத்து, முலாயம் சிங்கிற்க்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு கூறியுள்ளார்.

நிதிஷ் குமார்:

latest tamil news

முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பீகார் முதல்வர் நீதிஷ் குமார் கேட்டறிந்தார். மேலும் முலாயம் சிங் விரைவில் குணமடைய இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.