மஞ்சுவாரியரை ஆட வைத்த பிரபுதேவா

மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'ஆயிஷா'. இதன் கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்குகிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்ய, ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். மலையாளம், ஆங்கிலம், அரபு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஏழு மொழிகளில் தயாராகிறது.

இந்த படத்தில் சிறப்பான பாடல் ஒன்று இடம்பெறுகிறது. பாடலாசிரியர் பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

இந்த பாடலில் நடிகை மஞ்சு வாரியருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் ஆகியோரும் கலந்து கொண்டு ஆடியிருக்கிறார்கள். மஞ்சு வாரியர் மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களை நடனமாட வைத்திருப்பது பிரபு தேவா. இந்த பாடல் லடாக் பகுதியில் உள்ள பனிமலையில் படமாக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.