முப்படை தளபதி அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு| Dinamalar

புதுடில்லி முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானுக்கு இசட் பிளஸ்ட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை ஜெனரல் பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் அருகே கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். காலியாக இருந்த அப்பதவிக்கு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிப்பதாக மத்திய அரசு செப்.29-ல் அறிவித்தது. செப்.30 ம் தேதி பொறுப்பேற்றார்.
இந்நிலையில் முப்படை தளபதிக்கு ”இசட்பிளஸ்” பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி சவுஹானுக்கு 10 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் உள்ளிட்ட 55 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.