'கேமரா இருக்கு ஜாக்கிரதையா இருங்க' அமைச்சர் செஞ்சி மஸ்தான் அட்வைஸ்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

அப்போது கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:-

“தொடர்ச்சியாக திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் ஆங்காங்கே தங்களது பேச்சால் பல்வேறு சிக்கல்களில் சிக்கி வருகின்றனர். அதை மேற்குறி காட்டி அமைச்சர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இல்லை ஊராட்சி மன்ற தலைவர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அனைவரது கைகளிலும் தற்போது கேமராக்கள் இருக்கிறது. செல்போன் இருக்கிறது எனவே அவர்கள் நீங்கள் பேசுவதை வீடியோ எடுத்து உடனடியாக சமூக வலைதளங்களிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகளுக்கோ அனுப்பி விடுகிறார்கள். எடுத்துக்காட்டாக கடந்த வாரம் கூட ஒரு ஊராட்சி மன்ற தலைவர் உடைய பதிவு ஒன்று எனக்கு வந்து இருந்தது.

அதில் ஊராட்சி மன்ற தலைவர் மக்கள் குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டபோது ஊராட்சி மன்ற தலைவர் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை எனவும் குடிநீருக்கு என்ன அவசியம் என்றும் கூறி இருக்கிறார். உடனே அதை தொலைபேசியில் பதிவு செய்து பொதுமக்கள் என்னிடம் அனுப்பி இருந்தார்கள். ஆகையால் யாரும் இது போல் தேவையில்லாத வார்த்தைகளைப் பேசி மாட்டிக் கொள்ள வேண்டாம்.

நாம் அனைவரும் மக்கள் பிரதிநிதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஆகையால் எந்தவித பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்ற வேண்டும். எனக்கு அந்தப் பதிவு வந்த உடன் நான் துறை சார்ந்த அதிகாரிகளிடம் சொல்லி அந்த பிரச்சினையை தீர்த்து வைத்து விட்டேன்” இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.