தெலுங்கானா : தசரா பண்டிகையை முன்னிட்டு குவாட்டரும் கோழியும் வழங்கிய டி.ஆர்.எஸ். கட்சி தலைவர்… வீடியோ

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த ராஜநல்லா ஸ்ரீஹரி தசரா பண்டிகையை முன்னிட்டு வாரங்கல் கிழக்கு தொகுதியில் குவாட்டரும் கோழியும் வழங்கினார்.

பாரதிய ராஷ்டிரிய சமிதி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி தேசிய நீரோட்டத்தில் இணையும் எண்ணத்தில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருகிறார்.

இது தொடர்பாக நாளை நடைபெற இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி உயர்மட்டக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று பரபரத்து வருகிறது.

இந்த நிலையில், தசரா பண்டிகையை ஒட்டி 200 சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மது பாட்டிலுடன் ஒரு முழு கோழியை உயிருடன் வழங்கினார்.

ஏற்கனவே ஜெகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஆர். சர்மிளா கேசிஆரின் தேசிய கட்சியான பிஆர்எஸ் என்பதற்கு பார் & ரெஸ்டாரண்ட் கட்சி என்று கிண்டலடித்து வரும் நிலையில் டிஆர்எஸ் கட்சியினரின் இந்த நடவடிக்கை சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.