பொன்னியின் செல்வன் படத்தை பாராட்டிய நடிகர் நாகார்ஜுனா இயக்குனர் மணிரத்னத்தை வாழ்த்தினார்…

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் வெகுவாக பாராட்டி வரும் நிலையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் திரையரங்குகள் ‘ஹவுஸ் புல்’லாக காட்சியளிக்கின்றது.

மணிரத்னத்தின் இயக்கத்தில் வந்த இதயத்தை திருடாதே படத்தின் மூலம் இளசுகளை தியேட்டரில் கட்டிப்போட்ட நாகார்ஜுன் பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாகார்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி கோஸ்ட்’ என்ற தெலுங்கு திரைப்படம் தமிழில் ராட்சன் என்ற பெயரில் 5 ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சிக்காக சென்னை வந்த நாகார்ஜுன், ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்து விட்டு படம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்.

பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் படத்தை விமர்சித்து வருவது குறித்து அவரிடம் கேட்டபோது “அந்த விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்

பொன்னியின் செல்வனை திரையில் கொண்டு வர வேண்டும் என்பது மணியின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இதுபற்றி என்னிடம் சில முறை பேசியிருக்கிறார்.

தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை மணிரத்னம் மீண்டும் நிரூபித்துள்ளார்.

இதயத்தை திருடாதே படத்தில் அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பல இனிமையான நினைவுகள் உள்ளன. அவரை நான் இந்த சந்தர்ப்பத்தில் வாழ்த்த விரும்புகிறேன்” என்று நாகார்ஜுன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.