5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்! – உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம், உகைட்டியை அடுத்த கிராமம் ஒன்றில் 12 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உகைட்டி கிராமத்தில் வசித்து வரும் ஐந்து வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் அந்தச் சிறுமியை அங்கிருந்து தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளான். அதன் பிறகு அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

பாலியல் வன்கொடுமை (Representational Image) )

இதனால் பாதிப்புக்குள்ளான சிறுமி தட்டுத் தடுமாறி தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். அதன் பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திருக்கின்றனர்.

அதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவனை சிறார் சட்டத்தின் கீழ் கூர்நோக்குப் பள்ளியில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.