
இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை வட மாநிலங்களில் திரயோதசி, கௌரி விரதம் என்று 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். எனவே அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் இயங்காது.
இன்று 4ஆவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. 24ஆம் தேதி தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் விடுமுறை.

25ஆம் தேதி லக்ஷ்மி பூஜை என்பதால் காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை.
26ஆம் தேதி கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை என்பதால் அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
27ஆம் தேதி சித்ரகுப்த் ஜெயந்தி, காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in