டாடா கார்கள் விலை நாளை முதல் அதிகரிப்பு| Dinamalar

மும்பை, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், நவம்பர் 7ம் தேதி முதல், கார்களுக்கான விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

வாகன தயாரிப்புக்கான பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து சமாளித்து வந்த டாடா நிறுவனம், தற்போது வேறு வழியின்றி, கார்களின் விலையை குறைந்தபட்ச அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கார்களின் வகையைப் பொறுத்து, விலை அதிகரிப்பு மாறுபடும் என்றும்; சராசரியாக 0.9 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ‘டியாகோ, டிகார், ஆல்ட்ராஸ், பஞ்ச், நெக்சான், ஹாரியர், சபாரி’ ஆகிய கார்களை, இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.