எனது வாழ்த்துகளும், பேரன்பும்! நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை குறித்து சீமான் கருத்து


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆறு தமிழர்களை விடுதலை செய்த தீர்ப்பை சீமான் வரவேற்றுள்ளார்.

6 தமிழர்களை விடுவித்த உச்சநீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனது வாழ்த்துகளும், பேரன்பும்! நளினி உள்ளிட்ட 6 தமிழர்கள் விடுதலை குறித்து சீமான் கருத்து | Seeman Tweet Nalini Murugan Released Case

சீமான் டுவிட்டரில் பதிவு

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இராஜீவ் காந்தி வழக்கில், மீதமுள்ள ஆறு தமிழர்களையும் விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது.

இத்தீர்ப்புக்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், பேரன்பும்!

இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.