கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியுடன் கூடிய பகுதியை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள 560 கோயில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு, அறைக்காவலர்களை நியமிக்ககோரிய வழக்குகள் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.