சீனா தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைத்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் சமூக இடையூறுகளைக் குறைப்பதற்காக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள் சீனா புறப்படுவதற்கு முந்தைய சோதனைகள் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், கட்டாய தனிமைப்படுத்தல் 7 நாட்களில் இருந்து 5 நாட்களாகவும், அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நிரந்தர இருப்பிடம் இல்லாத பயணிகள் ஹோட்டல்களில் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.