வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காலை முதலே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ஆகிய 5 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் திருவள்ளூர், சென்னை, வேலூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம் , பெரம்பலூர், திருச்சி, அரியலூர்,புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.