காத்மாண்டு நேபாளத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 38 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தின் ரவ்டஹட் என்ற இடத்தில் செங்கல் சூளைகள் இயங்குகின்றன. இங்கு, நம் நாட்டின் உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்கின்றனர். இதில், ஒரு சூளையில் பலர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸ் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து, தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு கொத்தடிமைகளாக இருந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 38 பேரை மீட்டனர்.
விசாரணை மற்றும் ஆவண சரிபார்ப்புக்குப்பின், 38 பேரும் பீஹார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement