பகிடிவதை தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான அதிகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை பொலிஸ் மா வழங்கியுள்ளதாகவும் ,பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பகிடிவதை சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள், விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக பல சம்பவங்கள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. களனி பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பகிடிவதைக்கு உட்படுத்திய இரண்டு சம்பவங்கள் குறித்து கிரிபத்கொட மற்றும் களனி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலையத்தில் மேலும் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.