திருவையாறு : திருவையாறு அருகே பருவமழைக்கு பாதிப்படையாமல் இருக்க இயற்கை முறை வாழைத்தார்களுக்கு பிளாஸ்டிக் பை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வரும் பொங்கலுக்கு வாழைத்தார்கள் தயாராகி விடும் என்று விவசாயி மகிழ்ச்சி தெரிவித்தனர்.கடந்த காலங்களில் வாழை விவசாயிகள் பெரும்பாலானோர் பொங்கலுக்கு வாழைத்தார் அறுவடை செய்யும் போது விலை போகாமலும் அழிந்து போய் செலவு செய்த தொகையை எடுக்க முடியாமலும் திண்டாடி வந்துள்ளனர்.
60 நாட்களே உள்ள தைப்பொங்கலுக்கு அறுவடை செய்வதற்கான வாழைத்தார்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து அவற்றை நோய் நொடி தாக்காமல் பூச்சி தாக்கம் இல்லாமல் மக்கள் பார்த்தவுடன் வாங்கும் அளவிற்கு வாழைதாரை செம்மைப்படுத்துவதற்காக மகசூல் அதிகம் எடுப்பதற்காகவும் வாழை மரத்தில் உள்ள தாருக்கு முக்காலி மூலம் குழி போட்டு சவுக்கு களிகளை ஊனி தார்களை அதில் கட்டுகின்றனர்.
தஞ்சாவூர் தோட்டக்கலை சார்பில் மானிய விலையில் பாலித்தீன் பை வாங்கிய திருவையாறு அடுத்த வடுவக்குடி விவசாயி மதியழகன் அவற்றை பயன்படுத்தி வாழைத்தார் வீணாகாமல், குருவிகள் கொத்தாமல் பூச்சிகள் தாக்காமல், நோய் நொடிகள் இல்லாமல் இருப்பதற்காக கூடுதலாக தாருக்கு செய்த செலவை விட மேலும் ஒருதாருக்கு சுமார் 70 ரூபாய் செலவுகள் செய்து அவற்றை பாதுகாக்க முயற்சிக்கிறேன்.
வாழை விவசாயி 7000 வாழை பதியப்பட்டு அவற்றில் 5000 வாழைத்தார்களை அறுவடை செய்யலாம் என எண்ணி செய்து வருகிறார். சென்ற காலங்களில் இவ்வாறு செய்யாமல் வெளியில் நாட்டிற்கு அனுப்பிய போது அவற்றில் தொய்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.இந்தாண்டு வெளிநாட்டிற்கு முதல் தரத்தில் தார் இருக்கும், அதனால் அனுப்பலாம்இந்த பாதுகாப்பு முறையினை தோட்டக்கலைத் துறையிடம் பிளாஸ்டிக் பையை பெற்று அவற்றின் மூலம் வாழைத்தார் நல்ல மகசூல் கொடுப்பதற்கு ஏதுவாக மற்ற விவசாயிகள் பயன்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் இதுபோன்று பாதுகாப்பு முறை செய்வதால் பருவ மழையில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் தாக்கு பிடிக்கும். இதனால் மகசூல் கூடுதலாக இருக்கும். தாருக்கு நூற்றுக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும். இவ்வாறு விவசாயி மதியழகன் தெரிவித்தார்.