கூட்டு பலாத்கார வழக்கில் அந்தமானின், முன்னாள் தலைமைச் செயலர் ஜிதேந்திர நரைன் நேற்று கைது செய்யப்பட்டார்.
அந்தமானில், ௨௧ வயது இளம்பெண் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்னாள் தலைமைச் செயலர் ஜிதேந்திர நரைன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு, ஜிதேந்திர நரைன் உட்பட உயரதிகாரிகள் சிலர் சேர்ந்து, அப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக, குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கு சம்பந்தமாக, அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, ஜிதேந்திர நரைனிடம் மூன்று முறை விசாரணை நடத்தியது. இதையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி, உள்ளூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் விடுதியில் தங்கியிருந்த ஜிதேந்திர நரைனை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
உடல் பரிசோதனைக்குப் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement