கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு 26 முறை மகாத்மா காந்தி வந்ததாகவும், திருக்குறளை படிப்பதற்காக தமிழை கற்க விரும்பியதாகவும் குறிப்பிட்டார். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், பிரதமரை, முதலமைச்சர் அப்போது கேட்டுக்கொண்டார்.