நண்பர்களுடன் நேரத்தை செலவிட கணவருக்கு அனுமதி வழங்கிய பெண்| Dinamalar

பாலக்காடு :கேரளாவில், தங்களுடன் நேரத்தை செலவிட மாப்பிள்ளைக்கு அனுமதி அளிக்கும்படி, அவரது நண்பர்கள், மணப்பெண்ணிடம் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டைச் சேர்ந்தவர் ரகு. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு, அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்தது.

அப்போது, ரகுவின் நண்பர்கள் சிலர், 50 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரை கொடுத்து, அதில் கையெழுத்திடும்படி அர்ச்சனாவிடம் கூறினார். அந்த ஒப்பந்த பத்திரத்தில், ‘திருமணத்திற்கு பின்னும், என் கணவர் ரகு, இரவு 9:00 மணி வரை தன் நண்பர்களுடன் நேரத்தை செலவிட அனுமதிக்கப்படுவார்.

‘அந்த நேரத்தில் நான் அவரை மொபைல் போனில் அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த அர்ச்சனா, இதற்கு சம்மதம் தெரிவித்து, அந்த ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்துக்கான சாட்சிக்கு இருவர் கையெழுத்து போட்டு உள்ளனர். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.