பிரபல நடிகரை தடுத்து நிறுத்திய சுங்க அதிகாரிகள்: காரணம் என்ன தெரியுமா..?

ஷார்ஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நேற்று இரவு தனி விமானத்தில் மும்பை திரும்பிய நடிகர் ஷாருக்கான் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வைத்திருந்ததால் அவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு நேற்று இரவு மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையம் வந்த ஷாருக்கான் 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடிகாரங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் வைத்திருந்தார்.

இதனால் ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள், விலை உயர்ந்த பொருட்கள் குறித்து விசாரித்துள்ளனர். அத்துடன், சுங்க வரியாக 6.83 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினால்தான் விமான நிலையத்தில் இருந்து வெளியேற ஷாருக்கானுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஷாருக்கான் மற்றும் அவருடைய மேலாளர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதி அளிக்கப்பட்டாலும், ஷாருக்கான் உடன் வந்த மேலும் சிலரை இரவு முழுவதும் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியேற அனுமதி மறுத்துவிட்டனர். அவர்கள், விசாரணைக்குப் பிறகு இன்று காலை தான் வெளியே செல்ல அனுமதி அளித்தனர்.

மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கான் நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2011-ம் ஆண்டில், அதிக பொருட்களை எடுத்துச் சென்றதற்காக சுங்க அதிகாரிகள் குழுவினால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.